பலத்த மழையால் இந்தியாவில் 22 பேர் பலி

10 months ago
World
aivarree.com

இந்தியாவின் வடக்கு பகுதியில் பெய்து வரும் பலத்த மழையினால் குறைந்தது 22 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜூலை 10 அன்று தொடர்ந்து மூன்றாவது நாளாகவும் டெல்லி, இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா மற்றும் சண்டிகரின் பெரும்பாலான பகுதிகளில் இடைவிடாது மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக வீடுகளும் சேதங்களுக்குள்ளாகியுள்ளன.

இது தவிர மண்சரிவுகள் காரணமாக தேசிய நெடுஞ்சாலைகள் உட்பட பல வீதிகள் சேதமடைந்துள்ளன.

இமாச்சலப் பிரதேசத்தில் வாகன இயக்கம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், தொடர் மழையால் ஹரியானாவில் இமாச்சல பிரதேசம் மற்றும் பஞ்சாப் வழியாக சட்லஜ், ராவி, பியாஸ் ஆகிய ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.