வீடு வாடகைக்குத் தேவை எனக் கூறி, வீடு புகுந்த கொள்ளையர்கள் வீட்டிலிருந்த பெண்ணொருவரை தாக்கிவிட்டு, அவரிடமிருந்த தங்க நகைகள் என்பவற்றை கொள்ளைவிட்டுச் சென்றுள்ளனர்.
களுவாஞ்சிக்குடி, ஒந்தாச்சிமடம் பகுதியிலேயே இந்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
மூன்று இளைஞர்கள் கொண்ட குழுவொன்றே, வீட்டிலிருந்த குறித்த பெண்ணை தாக்கிவிட்டு, அவரின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலி, கையிலிருந்த தங்கக் காப்பு என்பவற்றைக் கொள்ளையடித்துத் தப்பிச் சென்றுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த பெண், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களூவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.