குருணாகல், யக்கஹபிட்டிய பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொது மகன் ஒருவரை இராணுவ அதிகாரி ஒருவர் சப்பாத்துக் காலால் உதைத்து தாக்கும் காணொளி சமூக வலைத் தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இதுத் தொடர்பில் இலங்கை இராணுவம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
குடிபோதையில் இருக்கும் நபரின் வன்முறை நடத்தையை வெளிப்படுத்தாமல் இராணுவ உறுப்பினரை கேலி செய்யும் முகமாக, அவரின் கோப தன்மைக்கு ஊடகங்களில் அதிகமாக முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
இராணுவத் தளபதியின் உத்தரவின் பேரில் மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகம் இந்த சம்பவம் தொடர்பாக முழுமையாக ஆராய்ந்து வருவதாக இராணும் குறிப்பிட்டுள்ளது.
இதுத் தொடர்பிலான பரிந்துரைகளை வழங்குவதற்காக ஐந்து பேர் கொண்ட விசாரணை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.