நெருக்கடியில் சஜீத்

8 months ago
Gossip
aivarree.com

ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து பிரிந்து தனிவழி செல்ல, ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர் தனிக்கட்சியை அறிவித்து அதன் ஊடாக அரசியலை முன்னெடுக்கவிருப்பதாக முன்பிருந்தே செய்திகள் வெளியாகி வந்திருந்த நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியிலும் அது சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் சரத் பொன்சேகா எதிர்வரும் நாட்களில் தமது அறிவிப்பை வெளியிட்டு ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து வெளியேறவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே ஐக்கிய மக்கள் சக்தியின் பல முக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிலிருந்து விலகுவதற்காக சமயம் பார்த்துக் கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

பல உறுப்பினர்கள் அடுத்துவரும் தேர்தல் அறிவிப்பு வரையில் காத்திருப்பதாகவும் கட்சியின் உள்ளகத்தகவல்கள் தெரிவிக்கின்றன.