நான்கு சீன நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்க குற்றச்சாட்டு

11 months ago
World
aivarree.com

நான்கு சீன இரசாயன உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் எட்டு நபர்கள் மீது அமெரிக்க நீதித்துறை வெள்ளிக்கிழமை (23) குற்றவியல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது.

போதைப்பொருள் வலி நிவாரணியான ஃபெண்டானில் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொருட்களை சட்டவிரோதமாக கடத்தியதற்காகவே இந்த குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஃபெண்டானில் முன்னோடி இரசாயனங்களை அமெரிக்காவிற்குள் கடத்தியதற்காக சீன நிறுவனங்களுக்கு அமெரிக்கா குற்றவியல் குற்றச்சாட்டுக்களை பதிவு செய்தது இதுவே முதல் முறையாகும்.

சீனாவை தளமாகக் கொண்ட இந்த இரசாயன நிறுவனங்களில் ஒன்று 50 கிலோகிராம் ஃபெண்டானைலை உருவாக்கும் நோக்கத்திற்காக 200 கிலோகிராம் ஃபெண்டானைல் தொடர்பான முன்னோடி இரசாயனங்களை அமெரிக்காவிற்கு அனுப்பியது.

இது 25 மில்லியன் அமெரிக்கர்களைக் கொல்ல போதுமான அளவு ஃபெண்டானைலைக் கொண்டிருக்கும் என்றும் அமெரிக் அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.