தேர்தலில் போட்டியிட தயாரான பெண் படுகொலை

1 year ago
Sri Lanka
aivarree.com

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாரான 65 வயதான பெண் ஒருவர் மினுவாங்கொடையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மினுவாங்கொடை – யொகொதமுல்லையில் உள்ள அவரது வீடும் தீ வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, அவர் சிறிலங்கா சுதந்திர கட்சியின் கீழ் இம்முறை தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாராகி இருந்தார்.

சம்பவம் தொடர்பாக கம்பஹா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.