சர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய தரவரிசையின்படி, ஒருநாள் போட்டிகளில் துடுப்பாட்டத்தில் இந்திய வீரர் விராட் கோலி நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இலங்கை அணியுடனான ஒருநாள் போட்டி தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி, 8ஆம் இடத்திலிருந்து 4ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விராட் கோலி 2 சதங்களுடன் 283 ஓட்டங்களை எடுத்தார்.
ஒருநாள் தரவரிசையில் பாகிஸ்தானின் பாபர் அசாம் 887 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
இதேவேளை, இலங்கை அணியுடனான போட்டியில் சிறப்பாக விளையாடியதன் காரணமாக மொஹமட் சிராஜ், ஷுப்மன் கில் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரும் தரவரிசையில் முன்னேறியுள்ளனர்.