தமிழ்நாட்டின், கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த 3 இளைஞர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தொன்றில் உயிரிழந்தனர்.
குறித்த நபர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள், லொறியொன்றுடன் மோதுண்டே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உயிரிழந்தவர்கள் குறித்த அகதிகள் முகாமில் வசிக்கும் தயாளன் (19 வயது), சார்ள்ஸ் (வயது 21), ஜோன் (வயது 20) என அடையாளம் காணப்பட்டனர்.
இவர்கள் மூவரும் திருவள்ளூர் முழுவதும் கட்டுமானப் பணிகளில் பெயின்டர்களாக வேலை பார்த்து வந்தவர்கள் என்றும் தமிழக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஞாயிறு இரவு 9 மணியளவில் சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் கும்மிடிப்பூண்டி பெத்திக்குப்பம் கிராமம் அருகே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.