டைட்டன் நீர்மூழ்கி படகில் சென்ற ஐவரும் பலியென அச்சம்

11 months ago
World
aivarree.com

டைட்டானிக் கப்பலின் சிதைவுகளை காண செல்லும் வழியில் காணாமல் போன டைட்டன் நீர்மூழ்கிக் படகின் உரிமை நிறுவனமான OceanGate, அதன் மாலுமியும் நான்கு பயணிகளும் உயிரிழந்ததாக நம்பப்படுவதாக அறிவித்துள்ளது.

OceanGate இன் அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறப்பட்டுள்ளபடி, அந்த நிறுவனத்தின் மாலுமி மற்றும் CEO ஸ்டாக்டன் ரஷும், பயணிகளான ஷாஜதா தாவூத் மற்றும் அவரது மகன் சுலேமான் தாவூத், ஹமிஷ் ஹார்டிங் மற்றும் பால்-ஹென்றி நர்கோலெட் ஆகியோர் மரணித்ததாக அஞ்சப்படுகிறது. 

OceanGate 2021 முதல் வருடாந்திர பயணங்களை நடத்தி, டைட்டானிக் படிப்படியாக சிதைவதை ஆவணப்படுத்துகிறது.

அத்துடன் அதைச் சுற்றியுள்ள நீருக்கடியில் சுற்றுச்சூழலை ஆய்வு செய்கிறது.

இன்று, அமெரிக்க கடலோர காவல்படை அதிகாரிகள், தேடுதல் நடவடிக்கையில் டைட்டன் நீர்மூழ்கி படகின் வெடிப்புக்கு ஒத்த துண்டுகள் கிடைத்ததாக தெரிவித்தனர்.