ஜே ஶ்ரீ ரங்கா விளக்கமறியலில்

1 year ago
Sri Lanka
aivarree.com

கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்கா, கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் நேற்று (18) ஆஜர்படுத்தப்பட்டார். 

அதன் பின்னர் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பதில் நீதவான் ரஞ்சித் சேபால தஹநாயக்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

வவுனியாவில் 2011ஆம் ஆண்டு இடம்பெற்ற கார் விபத்தில் பொலிஸ் சார்ஜென்ட் மரணமடைந்தமை தொடர்பான வழக்கு விசாரணைக்கு அவர் ஆஜராகவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த வழக்குடன் தொடர்புடைய சாட்சிகளை அச்சுறுத்தியதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.