தேசிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக கூறப்படுகிறது.
அந்த கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.
வரலாற்றில் அனுரகுமார திஸாநாயக்க உட்பட மக்கள் விடுதலை முன்னணியையோ அல்லது தேசிய மக்கள் சக்தியையோ பிரதிநிதித்துவப்படுத்தும் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் உரிய பொலிஸ் பாதுகாப்பைப் பெறவில்லை.
அரசாங்கத்தின் தற்போதைய பிரதான எதிரியாக இருப்பதால், அவர்களால் வழங்கப்படும் பாதுகாப்பை நம்ப முடியாது.
அதனை விட மக்களின் பாதுகாப்பு பலமானது என விஜித்த ஹேரத் கூறியுள்ளார்.