மாத்தளை, தொட்டகமுவ பகுதியில் இன்று அதிகாலை சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் வண்டியொன்று வீதியை விட்டு விலகி மரத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்த ஜீப் வண்டியின் சாரதி மற்றும் ஒன்பது இளைஞர்கள் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவர் உயிரிழந்தார்.
தொட்டகமுவ, பலாபத்வல பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுடைய இளைஞனே விபத்தில் உயிரிழந்தவர் ஆவார்.
மாத்தளை பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் 2022 உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் குழுவொன்றே இவ் அனர்த்தத்துக்கு முகங்கொடுத்துள்ளாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பலாபத்வல பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பொன்றில் கலந்து கொண்டு, திரும்பும்போதே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.