2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த இரு பிரித்தானிய பிரஜைகளின் சகோதரர் ஒருவர், தாக்குதலுக்கு உண்மையில் யார் காரணம் என்பதை அறிய விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், தனக்கும் தனது குடும்பத்துக்கும் இது தொடர்பில் ஒருபோதும் விடைகள் கிடைக்காது என தெரிவித்துள்ள டேவிட் லின்சே, ஷங்ரிலா ஹோட்டல் குண்டுவெடிப்பில் உயிரிழந்த தனது சகோதரர்களின் நினைவாக இலங்கை மக்களுக்கு ஏதாவது செய்ய விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
அத்துடன், நான் அரசியல் வாதியோ, நீதிபதியோ அல்ல என கூறியுள்ள அவர், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான முழுமையான விசாரணைகள் இடம்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
டெய்லி மிரரில் “On Fire with Easwaran Rutnam” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும்போதே அவர் மேற்கண்ட விடயங்களை கூறியுள்ளார்.