சுற்றுலாப் பயணிகளின் வருகையின் மூலம் இலங்கையின் வருமானம் கடந்த மார்ச் மாதத்தில் 198.1 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
2022 மார்ச் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகையின் மூலம் இலங்கைக்கு 161.2 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானமே கிடைத்தது.
இந்நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்வாண்டின் இதுவரையான காலப் பகுதியில் மொத்தம் 529.8 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை இலங்கை எட்டியுள்ளது.
ரஷ்யா, இந்தியா, இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளே கடந்த மார்ச் மாதத்தில் அதிகளவாக இலங்கை வந்துள்ளனர்.