சிவாஜி கணேசன் குறித்த நூல் அறிமுக விழா யாழ்.பல்கலையில்

1 year ago
Sri Lanka
aivarree.com

“சிவாஜி கணேசன்” எனும் நூலின் அறிமுக விழா எதிர்வரும் 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு யாழ். பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குறித்து தமிழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் முனைவர் மருதுமோகன், சென்னை பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து இந்நூலை எழுதியுள்ளார்.

நடிகர் திலகத்தின் மகன் ராம்குமார் கணேசன் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ். பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் எஸ்.ரகுராம் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் தொடக்கவுரையை இந்திய துணைத்தூதுவா் ராகேஷ் நட்ராஜ் நிகழ்த்துவார்.

அதனைத் தொடர்ந்து “நீங்கா நினைவில் சிவாஜி” என்ற தலைப்பில் பேராசிரியர் சி.சிவலிங்க ராஜாவின் சிறப்புரையும் இடம்பெறும்.