சமையல் எரிவாயுவின் விலையை நாளை முதல் குறைக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக லிட்ரோ நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
இதன்படி 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை அண்ணளவாக 1000 ரூபாவால் குறைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு நாளை நண்பகலுக்கு முன்னதாக வெளியிடப்படும் என்று, லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் அய்வரி செய்திகளுக்குத் தெரிவித்தார்.
டொலர் பெறுமதி குறைந்தமை, உலக சந்தையில் ஏற்பட்டுள்ள எரிவாயுவுக்கான விலை வீழ்ச்சி போன்றவற்றின் பலன்கள் பொதுமக்களுக்கு கிடைக்கப்பெற வேண்டும் என்ற நோக்குடன் இந்த விலைக்குறைப்பு மேற்கொள்ளப்படுகிறது.
இந்த விலைக்குறைப்பு பொதுமக்களுக்கு பாரிய நிவாரணமாக இருக்கும் என்று நம்புவதாகவும், இதனை மையமாக கொண்டு உணவகங்களின் உணவுப் பொருட்கள் உட்பட பல பொருட்கள் விலை குறையும் என்று எதிர்பார்ப்பதாகவும் முதித பீரிஸ் அய்வரி செய்திகளுக்கு தெரிவித்தார்.