கொஹுவலை வழியாக செல்லும் வாகன சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு

11 months ago
Sri Lanka
aivarree.com

கொழும்பு, கொஹுவலை மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகள் காரணமாக மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு வாகன சாரதிகளுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

கொஹுவலை மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகள் மே 31, 2023 இல் முடிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் நிர்மாணப் பணிகள் இன்னும் நிறைவடையவில்ல‍ை.

எனவே 01.06.2023 முதல் 31.07.2023 வரையான காலப்பகுதியில் குறித்த பகுதியூடான போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது

இதனால், கொஹுவளை சந்தியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில், சாரதிகள் மற்றும் பொதுமக்கள் மாற்று வீதிகளை முடிந்தவரை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.