டென்மார்க் அரசாங்கம் கொவிட் கட்டுப்பாடுகள் அனைத்தையும் நீக்கியுள்ளது.
இதன்படி இரவு விடுதிகள், மது விற்பனை நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதோடு பல்வேறு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.
நாட்டில் தொடர்ந்தும் கொவிட் நோயாளர்கள் இனம் காணப்படுகின்ற போதிலும் அதனை சமூக அச்சுறுத்தல் நிறைந்த நோயாகக் கருதத் தேவையில்லை என டென்மாா்க் தீர்மானித்துள்ளது.
தடுப்பூசி காரணமாக நோயாளர்களின் உடல்நிலை பாதிப்பு குறைவாக காணப்படுவது அவதானிக்கப்பட்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.