ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்பு செப்டெம்பரில்

10 months ago
Gossip
aivarree.com

ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பினை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் செப்டெம்பர் மாத நடுப்பகுதியில் மாநாடு ஒன்றை நடத்தி கட்சிக்கு புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த அரசியலமைப்பின் கீழ், கட்சியின் பொதுச் செயலாளரின் அதிகாரங்கள் குறைக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

அதுமாத்திரமன்றி தற்போதுள்ள ஒரு பிரதித் தலைவர் பதவிக்கு பதிலாக ஏழு அல்லது எட்டு பிரதித் தலைவர் பதவிகள் உருவாக்கப்படவுள்ளதாம்.

இந்த ஏழு அல்லது எட்டு பிரதித் தலைவர்களுக்கே கட்சியின் அனைத்து அமைப்பு செயல்பாடுகளும் ஒதுக்கப்படும் என்றும் குறிப்பிடப்படுகிறது.