கிழக்கு உக்ரேனில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்; மூன்று குழந்தைகள் உட்பட 8 பேர் பலி

11 months ago
World
aivarree.com

கிழக்கு உக்ரேனில் உள்ள கிராமடோர்ஸ்க் நகரின் மீது ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் மூன்று குழந்தைகள் உட்பட எட்டுப் பேர் உயிரிழந்தாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலில் குறைந்தது 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

செவ்வாய்கிழமை மாலை ரஷ்யா இரண்டு S-300 ஏவுகணைகளை நகரின் மீது வீசியது.

ஒரு ஏவுகணை நகர மையத்தில் உள்ள பிரபலமான ரியா பிஸ்ஸா என்ற உணவகத்தைத் தாக்கியது.

இரண்டாவது ஏவுகணை நகரின் விளிம்பில் உள்ள ஒரு கிராமத்தைத் தாக்கியது.