ஐஎஸ்ஐஎஸ் தொடர்பு – காத்தான்குடியில் கைதானவரிடம் இருந்து பல்வேறு தகவல்கள்

1 year ago
Sri Lanka
aivarree.com

இஸ்லாமிய அரச பயங்கரவாத தொடர்புகொண்ட குற்றச்சாட்டில் காத்தான்குடியில் கைதான வர்த்தகரிடம் இருந்து பல்வேறு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.


பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் அவர் கடந்த தினம் கைது செய்யப்பட்டிருந்தார்.


அவர் இந்தியாவில் இஸ்லாமிய அரச பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு கொண்டிருந்தமைக்காக கைதான 2 பேருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியுள்ளமை தெரியவந்துள்ளது.


மேலும் இலங்கையில் இஸ்லாமிய அரச அடிப்படைவாதத்தை பரப்புவதற்காக அவருக்கு பல பில்லியன் கணக்கான ரூபாய்கள் பரிமாற்றப்பட்டிருப்பதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


அவர் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்.

-மவ்ரட்ட-