உடல் நீல நிறமாகி வைத்தியசாலையில் மர்மமாக உயிரிழந்த யுவதி

10 months ago
Sri Lanka
aivarree.com

பேராதனை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மர்மமான முறையில் மரணித்த 21 வயதான யுவதி ஒருவர் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வயிற்று நோவுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சையின் போது கெனியூலா ஊடாக இரண்டு மருந்துகள் ஏற்றப்பட்டதாகவும், அதனை அடுத்து அவரது உடல் நீல நிறத்துக்கு மாறியதாகவும் அவரது தாயார் தெரிவித்துள்ளார்.

தமது பிள்ளைக்கு வேறெந்த நோயும் இல்லை என்று தெரிவித்த அவரது தாய், குறித்த மருத்தினை ஏற்றியதன் பின்னர் அவரது உடல் நீல நிறத்திற்கு மாறியதாகவும், பின்னர் கழிவறையில் அவர் மயங்கி விழுந்ததாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து பேராதனை வைத்தியசாலை வட்டாரங்கள் மற்றும் பேராதனை பொலிஸாரும் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மேலும் குறித்த யுவதியின் மரணம் தொடர்பான சூழ்நிலைகளை கண்டறிய ஒரு தடயவியல் பரிசோதனையும் நடத்தப்படவுள்ளது.