இலங்கை இந்திய வெளிவிவகார அமைச்சர்கள் சந்தித்தனர்.
இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளார மற்றும் சுற்றுலா தொடர்புகள் பற்றி விரிவாக ஆராயப்பட்டது.
ஜெய்சங்கர் தமது டுவிட்டரில் இதனை பதிவிட்டுள்ளார்.
மீனவர்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டதுடன், இந்த விடயத்தில் விரைவாக இருதரப்பு பொறிமுறை ஒன்று கொண்டுவரப்பட வேண்டும் என இணங்கப்பட்டது.
இலங்கை – இந்திய ராஜதந்திர தொடர்புகளின் 75வது ஆண்டு பூர்த்தியை பொருத்தமான முறையில் அனுஷ்டிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
https://twitter.com/drsjaishankar/status/1490599553787379715?s=21