இன்று மின் துண்டிப்பு இருக்காது 

1 year ago
Sri Lanka
aivarree.com

நீரேந்தும் பகுதிகளில் கடும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், நீர்த்தேக்கங்களில் இருந்து மேலதிக நீரை வெளியிட நீர் முகாமைத்துவ செயலகம் தீர்மானித்துள்ளது. 

இதனால் இரண்டு நாட்களுக்கு மின்வெட்டு இருக்காது என இலங்கை மின்சார சபை நேற்று அறிவித்தது. 

அதன்படி, நேற்றைய தினம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவில்லை எனவும், இன்றும் (31) அமுல்படுத்தப்பட மாட்டாது எனவும் இலங்கை மின்சார சபையின் தலைவர் நலிந்த இளங்ககோன் தெரிவித்துள்ளார்.

உயர்தரப் பரீட்சைகளின் இறுதி நாளான பெப்ரவரி 17 ஆம் திகதி வரை நீர்மின் நிலையங்களுக்குப் போதியளவு நீரைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பில், நீர் முகாமைத்துவ செயலகத்துடன் நாளை (ஃபெப்ரவரி 1) கலந்துரையாடவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL)  குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் நாட்களில் போதிய மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதால், உயர்தரப் பரீட்சை காலத்தில் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்குவதற்கு இது உதவும் என CEBக்கு அறிவித்துள்ளதாக PUCSL மேலும் குறிப்பிட்டுள்ளது.