பங்களாதேஸில் கண்ணாமூச்சி விளையாட்டின் போது 15 வயது சிறுவன் ஒருவர், ஜனவரி 11ஆம் திகதி துறைமுக நகரமான சிட்டகாங்கில் கொள்கலனுக்குள் ஒளிந்து உறங்கிவிட்டார்.
பின்னர் அந்த கொள்கலன் மலேசியாவிற்கு செல்லும் வணிகக் கப்பலில் ஏற்றப்பட்டதுடன், ஆறு நாட்களுக்குப் பிறகு ஜனவரி 17 அன்று மலேசிய துறைமுகத்தில் சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டான்.
அவர் சுமார் 2,300 மைல்களுக்கும் அதிகமான தூரம் கப்பல் கொள்கலனில் உள்ளே இருந்தவாறே நீர், உணவு எதுவும் இன்றி பயணித்துள்ளார்.
மிகவும் பலவீனமான நிலையில் மீட்கப்பட்ட அவர், பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிறுவன் மனித கடத்தலில் சிக்கியிருக்கலாம் என பொலிசார் முதலில் சந்தேகித்த போதும், விசாரணையில் அவர் விளையாட்டின் போது கொள்கலனுக்குள் ஒளிந்தமை உறுதியானது.
-TOI-