ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமைந்துள்ள வெளியுறவு அமைச்சின் அலுவலகத்திற்கு அருகே திங்களன்று நடந்த குண்டுவெடிப்பில் 6 பேர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
மூன்று மாதங்களுக்குள் அமைச்சுக்கு அருகில் இடம்பெற்ற இரண்டாவது தற்கொலைத் தாக்குதல் இதுவாகும் என்று AFP தெரிவித்துள்ளது.
காபூலின் வெளிவிவகார அமைச்சுக்கு அருகாமையில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு முன்பாக இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலில் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
அதேநேரம் இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை என்று ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.