ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கோரியபடி அமைச்சுப் பொறுப்புகளை வழங்க ஜனாதிபதி திட்டவட்டமாக மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதற்கு பதிலாக புதிய உயர் பதவிகளை வழங்குவதற்கு ஜனாதிபதி யோசனை முன்வைத்த போதும், அதனையும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் நிராகரித்துள்ளனர்.
இந்த நிலையில் கோபமடைந்துள்ள பொதுஜன பெரமுனவின் அணியொன்று தற்போதைய அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான சூழ்ச்சியில் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.