யாழ்ப்பாணத்தைத் சேர்ந்த புஷாந்தனுக்கு சர்வதேச வெண்கல பதக்கம்

11 months ago
SPORTS
aivarree.com

ஹாங்காங்கில் நடைபெற்ற ஆசியா பசுபிக் ஆபிரிக்கா பளுதூக்கல் போட்டியில் இலங்கை சார்பாக கலந்து கொண்ட புசாந்தன். ஸ்குவாட் முறையில் 325 கிலோவை தூக்கி 3 ஆம் இடம்பெற்று வெண்கல பத்தக்கத்தினை பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியை சேர்ந்த சற்குணராசா புசாந்தன் பல போட்டிகளில் கலந்து கொண்டு சாதித்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை நேரப்படி நேற்று மாலை 4.30 மணியளவில் குறித்த போட்டி இடம்பெற்றது.