அவதூறு வழக்கில் ராகுல் காந்தியின் மனு நிராகரிப்பு

11 months ago
World
aivarree.com

மோடியின் குடும்பப்பெயர் குறித்த அவதூறு வழக்கில் தனக்கு எதிராக விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தாக்கல் செய்த மனுவை குஜராத் மேல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (07) நிராகரித்தது.

தண்டனையை நிறுத்தி வைப்பதற்கு நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை என்று மேல் நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

தேர்தல் பேரணியில் பிரதமர் நரேந்திர மோடியின் குடும்பப் பெயரைப் பற்றி 2019 ஆம் ஆண்டு கருத்து தெரிவித்ததற்காக ராகுல் காந்திக்கு கடந்த மார்ச் மாதம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இந் நிலையில் குஜராத் மேல் நீதிமன்றின் உத்தரவை எதிர்த்து ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வார் என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.