இந்தியாவின் ஒடிசா தனியார் தொலைக்காட்சி அலைவரிசையொன்று செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் உருவாக்கிய பெண் மெய்நிகர் செய்தி வாசிப்பாளர் ரோபோவை அறிமுகம் செய்துள்ளது.
அதற்கு ‘லிசா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதன் அறிமுக நிகழ்வு ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் மெய்நிகர் பெண் செய்தி வாசிப்பாளரான லிசா ரோபோ அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
லிசா, பல மொழிகளையும் பேசும்திறன் கொண்டது, எனினும் முதல் கட்டமாக ஒடியா மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் பேசும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.