சுகாதார கொள்கைகள் நிறுவகம் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளவர்களுக்கான கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளது.
இதன்படி அனுரகுமார திஸாநாயக்க 45 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், சஜித் பிரேமதாச 37 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 13 புள்ளிகளுடன் 3ம் இடத்தில் உள்ள நிலையில், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் 6 புள்ளிகளுடன் நான்காம் இடத்தில் உள்ளார்.
எவ்வாறாயினும், இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்புகளில் அனுரகுமார திஸாநாயக்க 51 மற்றும் 49 புள்ளிகளைப் பெற்றிருந்த நிலையில், தற்போது அது 45 புள்ளிகளாக குறைவடைந்துள்ளது.
சஜித் பிரேமதாசவின் புள்ளிகள் குறிப்பிடத்தக்க அளவில் மாறவில்லை.
எனினும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த கருத்து கணிப்புகளில் 7 மற்றும் 10 புள்ளிகளைப் பெற்றிருந்த நிலையில், தற்போது அது 13 ஆக அதிகரித்துள்ளது.