பயணிகள் போக்குவரத்து அனுமதிப்பத்திரம் இன்றி இயங்கும் பயணிகள் பஸ்களை கண்டறியும் வேலைத்திட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நேற்று (11) கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கும் யாழ்ப்பாணம் மற்றும் மன்னாருக்கு பயணிகள் போக்குவரத்து அனுமதிப்பத்திரம் இன்றி இயங்கிய நான்கு பஸ்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாக அதன் பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டா தெரிவித்தார்.
இந்த சோதனை நடவடிக்கைகளுக்காக 4 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, மன்னம்பிட்டி பகுதியல் அண்மையில் இடம்பெற்ற பஸ் விபத்தை தொடர்ந்து, அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையை பாராட்டுவதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.