அதிருப்தியில் ஹரின் உள்ளிட்ட அமைச்சர்கள்

10 months ago
Gossip
aivarree.com

அரசாங்கத்தின் மூன்று முக்கியமான அமைச்சர்கள் அதிருப்தியில் இருப்பதாக லங்கா சீநியூஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அமைச்சர்களான ஹரின் பெர்ணாண்டோ, ரொசான் ரணசிங்க மற்றும் திலும் அமுனுகம ஆகியோரே இவ்வாறு அதிருப்தியுடன் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்களின் செயற்பாடுகள் பலவற்றில் ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரிகள் சிலர் அதிகளவில் தலையிடுவதே இதற்கான காரணம் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக அமைச்சர் ஹரின் ஃபெர்ணாண்டோவின் பல அமைச்சரவை பத்திரங்கள் கிடப்பில் விடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.