மேல், மத்திய, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளைய தினம் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், மகப்பேறு மற்றும் சிறுவர் மருத்துவமனைகள், தேசிய புற்றுநோய் வைத்தியசாலை, தேசிய மனநல நிறுவனம், சிறுநீரக சிகிச்சை பிரிவுகள், இராணுவ மருத்துவமனைகள் மற்றும் அனைத்து மருத்துவமனைகளிலும் உள்ள அவசர சேவைகள் உட்பட இந்த மாகாணங்களில் உள்ள சிறப்பு மருத்துவமனைகள் இதனால் பாதிக்கப்படாது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திம் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே இதனைத் தெரிவித்துள்ளார்.