புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலங்குளம் பகுதியில் நேற்று (29) இரட்டைக் கொலைச் சம்பவம் ஒன்று பதிவானது.
காணி பிணக்கு தொடர்பாக இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த நால்வரில் 41 மற்றும் 45 வயதுடைய இருவர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களில் ஒருவரால் அரச காணி ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த மாட்டுத் தொழுவத்தை ஒருவர் அகற்ற முற்பட்டதை அடுத்து இந்த மோதல் ஏற்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காயமடைந்தவர்களில் இருவர் திருகோணமலை வைத்தியசாலையிலும், இருவர் புல்மோட்டை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்ட பின்னர் இருவர் உயிரிழந்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய புல்மோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.