உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு, தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் அனைத்து உறுப்பினர்களும் கைச்சாத்திட்டு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட வேண்டிய அவசியமில்லை என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு (30) தெரிவித்துள்ளது.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவாவை மேற்கோள்காட்டி நியூஸ்ஃபெஸ்ட் வெளியிட்டுள்ள செய்தியின்படி, மாவட்ட தேர்தல் அதிகாரிகளால் தேவையான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என அறிய முடிகிறது.
இது தொடர்பான வர்த்தமானி இன்று (30) அல்லது நாளை (31) அச்சிடுவதற்காக அரச அச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என கூறப்படுகிறது.
இந்த வர்த்தமானி இதுவரை அரசாங்க அச்சகத்திற்கு அனுப்பப்படவில்லை என அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று (29) தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.