கொட்டாஞ்சேனை, ஹெட்டியாவத்தை பகுதியில் கழிவுக் குழாயின் திருத்த பணிக்காக திறக்கப்பட்டிருந்த ஆழமான குழிக்குள் வீழ்ந்த இரு தொழிலாளர்களும் மீட்கப்பட்டு, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
குழியிலிருந்து வெளியான விசவாயுவால் மயக்கமடைந்த அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸாரும், பிரதேச மக்களும் தெரிவித்துள்ளனர்.
திருத்த பணிகளுக்காக திறக்கப்பட்டிருந்த குழிக்குள் இரு தொழிலாளர்களும் இறங்கி வேலை செய்யும் போது ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக மயக்கமடைந்த நிலையில் குழிக்குள் வீழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த குழியானது சுமார் 20 அடி வரை ஆழம் கொண்டதெனவும், தீயணைப்பு படையினரின் 15 – 20 நிமிட போராட்டங்களின் பின்னரே தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கொழும்பு மாநகர சபையின் முன் பாதுகாப்பு இல்லாத முறையற்ற பரமாறிப்பு பணிகளே இந்த அனர்த்தத்துக்கு காரணம் என பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.