முறையான திட்டம், அனுபவம் மற்றும் சர்வதேச தொடர்புகள் என்பவற்றின் காரணமாகவே தனியொரு பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போதும் எவ்வித நிபந்தனைகளும் இன்றி நாட்டைப் பொறுப்பேற்றதாகவும் அதன் ஊடாக நரகத்தில் விழுந்த நாட்டை மீட்க முடியும் என்ற நம்பிக்கை தனக்கு இருந்ததாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (09) பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையின் போது தெரிவித்தார்.
அத்துடன் மூன்று முதன்மைத் துறைகளின் ஊடாக கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவித்த ஜனாதிபதி, முதலாவது உள்நாட்டுக் கடனை மறுசீரமைப்பதாகவும் தெரிவித்தார்.
கடன் வழங்கும் நாடுகளுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவது மாத்திரமே இந்த விடயத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
உத்தியோகபூர்வ கடனாளிகள் குழுவுடன் வரைவுகள் குறித்து இலங்கை அரசாங்கம் கலந்துரையாடி வருவதாகவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.