தேநீரும் வடையும் 800 ரூபா – சுற்றுலா பயணியை ஏமாற்றிய நபர் கைது

2 weeks ago
Sri Lanka
aivarree.com

களுத்துறையில் சுற்றுலாப் பயணியை ஏமாற்றி வடையும் தேனீரும் 800 ரூபாவிற்கு விற்பனை செய்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் வௌியான காணொளியை அடிப்படையாகக் கொண்ட இந்த கைது இடம்பெற்றுள்ளது.

மேலும், உணவகத்தின் உரிமையாளருக்கு எதிராக தனி வழக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.