பெரும் படையுடன் டுபாய் செல்லும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

6 months ago
Sri Lanka
aivarree.com

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சுமார் 80 பேர் அடங்கிய தூதுக்குழுவுடன் அடுத்தவாரம் டுபாய் செல்லவுள்ளார்.

அமைச்சர்களான அலி சப்ரி, கஞ்சன விஜயசேகர, கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட பலரும் இந்த குழுவில் அடங்குகின்றனர்.

அத்துடன் 20 பேர் கொண்ட இளைஞர் குழு ஒன்றும், 15 தொழில்நுட்ப ஆலோசகர்களும் இந்த குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சண்டே டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள தகவல்படி இந்த குழுவின் பெரும்பாலான உறுப்பினர்களான கட்டணங்கள் அவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கலாம் அல்லது பிற நிறுவனங்கள் அனுசரணை வழங்கி இருக்கலாம் என்று அறியக்கிடைக்கிறது.

டுபாயில் அடுத்தவாரம் இலங்கை முன்னின்று நடத்துகின்ற சூழல்பாதுகாப்பு மாநாட்டிற்காகவே இந்த குழு அங்கு செல்கிறது.