வெப்பநிலை உயர்வு தொடருமா

5 months ago
Sri Lanka
aivarree.com

கொழும்பு, களுத்துறை, கம்பஹா, காலி மற்றும் மாத்தறை உள்ளிட்ட நாட்டின் பல மாவட்டங்களில் நிலவும் கடும் வெப்பமான சூழல் எதிர்வரும் மார்ச் மாதம் நடுப்பகுதி வரை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதனால் நாட்டின் சில பகுதிகளில் உள்ள நீரோடைகள் மற்றும் கிணறுகளின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளதாகவும் மக்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை குருநாகல் மாவட்டத்தில் நேற்று (26) அதிகூடிய வெப்பநிலையாக 35.5 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.