தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு

1 week ago
aivarree.com

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கம் உறுதியான தீர்மானத்தை எடுத்துள்ளதாக ஜனாதிபதியின் தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தோட்டத் தொழிலாளர் சங்கங்கள் மற்றும் தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துடன் கலந்துரையாடி குறைந்தபட்ச சம்பளமாக 1,700 ரூபாவை வழங்க ஜனாதிபதி உத்தேசித்துள்ள போதிலும், தோட்டத் தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் இதுவரையில் வெற்றியளிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.