வெலிகம பிரதேச சபையின் முன்னாள் தலைவர் புஷ்பகுமார பட்டகேவை எதிர்வரும் ஜுன் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கொடவில பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் ஏனைய பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரிலே அவருக்கு எதிராக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.