பாதுகாப்புப் பிரதானிகளின் சேவைக் காலம் நீடிப்பு – ஜனாதிபதியின் அதிரடி தீர்மானம்

2 months ago
Sri Lanka
aivarree.com

அனைத்து பாதுகாப்புப் பிரதானிகளின் சேவைக் காலத்தையும் எதிர்வரும் டிசம்பர் மாதம் இறுதி வரை நீடிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் முடிவடையும் வரை நாட்டின் பாதுகாப்பு வேலைத்திட்டத்தை இலகுவாக பேணுவதற்கு ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

அதன்படி ஜனாதிபதியினால் எடுக்கப்பட்ட இந்த தீர்மானத்தின் அடிப்படையில் பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கும் சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஜனாதிபதியின் இந்த முடிவின் மூலம், டிசெம்பர் மாதத்திற்கு முன்னர் சேவைக் காலம் முடிவடையவுள்ள முப்படைத் தளபதிகள் மற்றும் அனைத்து பாதுகாப்புப் பிரதானிகளும் எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை பதவியில் இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது