விஜயதாச ராஜபக்ஸவிற்கு எதிரான தடை உத்தரவு நீடிப்பு

2 months ago
Sri Lanka
aivarree.com

விஜயதாச ராஜபக்ஸவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக நியமிப்பதையும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகச் செயற்படுவதை தடுத்தும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராகச் செயற்படுவதற்கும் எதிராக விதிக்கப்பட்ட தடை உத்தரவை மேலும் நீடிப்பதாக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த வழக்கில் உரிய ஆட்சேபனைகளை முன்வைக்க கால அவகாசம் வழங்குமாறு பிரதிவாதி நீதிமன்றத்திடம் கோரியதை அடுத்து, இந்த தடை உத்தரவை வரும் 25ம் திகதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும் அமைச்சருமான லசந்த அழகியவண்ணவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.