நாடளாவிய ரீதியில் நாளை 40 மேதின பேரணிகள் மற்றும் கூட்டங்கள் இடம்பெறவுள்ளதுடன் கொழும்பில் 14 பேரணிகள் மற்றும் கூட்டங்களுக்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதான கட்சிகள் சில கொழும்பிலும் வெளி மாவட்டங்களிலும் மே தினக் கூட்டங்களை நடத்தவுள்ளன.
குறிப்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில், ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம் கொழும்பு மருதானையில் நடைபெறவுள்ளது.
பொதுஜன பெரமுனவின் மே தின கூட்டம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தலைமையில் பொரளை கெம்பல் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம் கொழும்பு நகர சபை மண்டப வளாகத்தில் நடைபெறவுள்ளது.
தேசிய மக்கள் கட்சியின் மே தினக் கூட்டம் கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் நடைபெறவுள்ளது.
தேசிய மக்கள் சக்தி இம்முறை நாட்டின் நான்கு மாவட்டங்களில் தனித்தனி மே தின கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
கொழும்பு யாழ்ப்பாணம் மாத்தறை மற்றும் அனுராதபுரம் ஆகிய பகுதிகளில் இக் கூட்டங்கள் நடைபெறவுள்ளன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மைத்திரிபால சிறிசேன தரப்பினரின் மே தினக் கூட்டம் கம்பஹா நகர சபை மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் மே தினக் கூட்டம் கிளிநொச்சியிலும் மட்டக்களப்பிலும் நடைபெறவுள்ளது.