இலங்கை பாராளுமன்றத்தில் பதவி வகிக்க முடியாது என உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என முன்னாள் அமைச்சர் டயனா கமகே ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
“நான் நீதித்துறையை மதிக்கும் நபர். இருப்பினும், பல காரணங்களால் இந்த தீர்ப்பை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதன் பின்னணியில் பெரிய அரசியல் சதி உள்ளது” என்று கமகே குறிப்பிட்டுள்ளார்.
“எனது அரசியல் பயணம் இத்துடன் நிற்காது. சிறிது காலத்தில் பாராளுமன்றம் கலைக்கப்படும். எதிர்காலத்தில் நான் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன். நான் எப்போதும் ஜனாதிபதியை ஆதரிப்பேன். ர நான் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வருவேன்” என்றார் என்று அவர் தெரிவித்துள்ளார்.