சுகயீன விடுமுறையில் ஈடுபடவுள்ள ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி

2 months ago
Sri Lanka
aivarree.com

நாளை (12) நள்ளிரவு 12 மணி தொடக்கம் 13 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை சுகயீன விடுமுறையில் ஈடுபட உள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி தீர்மானித்துள்ளது

அதன்படி நாடு முழுவதிலும் உள்ள அனைத்து தபால் நிலையங்களும் எதிர்வரும் 13ஆம் திகதி காலை முதல் மூடப்படும் என அதன் அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.

இதேவேளை தபால் துறை தற்போது பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. சுமார் 2,000 பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளதால், 4 ஆண்டுகளாக பதவி உயர்வு மற்றும் ஆட்சேர்ப்பு இல்லை.

இதனால், ஊழியர்கள் சேவை செய்ய கடும் முயற்சி எடுக்க வேண்டியுள்ளதுடன் வெற்றிடங்கள் உள்ளதால் மக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்குவதில் சிரமம் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.