அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவம் நடந்துள்ளது.
இந்த சம்பவத்தில் பேராயர் ஒருவரும் மற்றுமொருவரும் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சிட்னியின் தென்மேற்கு பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் ஆராதனைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது கறுப்பு உடையில் வந்த நபர் ஒருவர் திடீரென கத்தியால் தாக்கியுள்ளார்.
தேவாலயத்தின் ஆராதனை சமூக வலைதளங்களில் நேரடியாக பதிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன
இதேவேளை சிட்னியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மனநலம் பாதிக்கப்பட்ட நபரொருவர் வணிக வளாகமொன்றில் நடத்திய கத்திக் குத்துத் தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.