3 ஆண்டுகளின் பின் பிணையில் சென்ற சஹ்ரானின் மைத்துனர் மீண்டும் கைது

1 year ago
Sri Lanka
aivarree.com

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்ட சஹ்ரான் ஹாஷிமின் மைத்துனர் நீர் கொழும்பு, கொச்சிக்கடை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கட்டுபெத்தயிலிருந்து கொச்சிக்கடை பிரதேசத்தில் உள்ள தனது மனைவியின் பெற்றோர் வீட்டிற்கு வந்து கொண்டிருந்த வேளையிலேயே நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதன்போது அவரின் மனைவியும் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதான சந்தேக நபர் உயர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதானியாகக் கருதப்படும் சஹ்ரான் ஹாசிமின் மனைவியின் சகோதரர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைதாகி 2019 முதல் விளக்கமறியலில் வைக்கப்பட்டு, பின்னர் 2022 செப்டெம்பர் உயர் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டவர் ஆவார்.